வல்லரைக்கீரை குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
வல்லரைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1 கப்
துவரம்பருப்பு - 100
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 4
சீரகம் - 1/2 டிஸ்பூன்
மஞ்சள் - 1/2 டிஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - சிறிது
எண்ணெய் - 3 டிஸ்பூன்
வத்தல் - 2
செய்முறை
துவரம் பருப்பை வேகவைக்கவும். அதில் மஞ்சள், சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வேகவைக்கவும். பின் வெந்தவுடன் வாணயிலில் எண்ணெய் ஊற்றி விடவும். எண்ணெய் சூடு ஆனவுடன் கடுகு போடவும். கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலை,வத்தல், வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் முருங்கைகாய்,கத்திரிக்காய் போட்டு வதக்கவும். புளிகரைத்துச் சோத்துக் கொள்ளவும். பின் கொதி வந்தவுடன் வெகவைத்த பருப்பைச் சேர்த்துக்கொள்ளவும். பின் வல்லரையை நன்கு கழுவி கொதிக்கும் போது போட்டு வெக வைக்கவும். பின் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்குறிப்பு
வல்லரைக்கீரை ஞாபக சக்தியை தரக் கூடியது. குழந்தைக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சியைத் தரக் கூடியது. இரவு நேரத்தில் இதை சாப்பிடக் கூடாது. பொதுவாக இரவு உணவில் கீரையைப் பயன்படுத்தக் கூடாது.
1 Comments
nice posts
ReplyDeleteChettinadu Foods