Pannir Paradtha - பன்னீர் பராத்தா
தேவையான பொருட்கள் :
பிசைந்தமாவு - 1/2 கிலோ
பன்னீர் - 150
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 5கிராம்
நறுக்கியபூண்டு - 5கிராம்
கொத்தமல்லி - 1 கப்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - 100
கரம்மசாலா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
செய்முறை :
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பன்னீரைத் துருவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். நறுக்கியவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறவும். கொத்தமல்லி பன்னீர் சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி, கரம்மசாலா தூவி வதக்கவும். பிசைந்தமாவில் பன்னீர் கலவையை அடைக்கவும். சரியாக மூடவும் பின் வட்டமாக உருட்டி சமைக்கவும். இதனுடன்கெட்டிதயிர், ஊறுகாய், சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
0 Comments