How to create Kezhvaragu Koozh
தேவையானபொருட்கள்
கேழ்வரகுமாவு - 5 கப்
அரிசி - 3 கப்
அரிசி - 3 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கூழ் செய்வதற்கு ஒரு நாள் முன்னவே மதிய வேளையில் கேழ்வரகு மாவை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்து கொள்ளவும். அடுத்தநாள் மாலையில் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ளவும். வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி போட்டு பாதி வெந்தவுடன் கேழ்வரகு மாவை ஊற்றவும். மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும். பின் வெந்தவுடன் இறக்கவும் வைத்து விடவும் மறுநாள் காலையில் குடிக்கவும். கோடையில் நல்ல உணவு ஆகும்.
பின்குறிப்பு
அடிபிடிக்காமல் இருந்தால் தான் கூழ் சுவையாக இருக்கும். கூழ் குடித்து அதற்கு சுவை ஊட்டும் மாங்காய் துண்டுகள் அல்லது ஊறுகாய் அல்லது மோர் வத்தல் அல்லது வெங்காயம் மிகவும் அருமையாக இருக்கும்.
0 Comments