Murungai Keerai Sambar - முருங்கைகீரை சாம்பார்
"பொன் மேனி பெற பொன்னாங்கண்ணி"
கீரைகள் எப்போதும் உடல் வனப்பினையும், ஆரோக்கியத் தையும் வழங்கும் விலை மலிவான தரமான உணவு பொருட்கள் ஆகும். சரியான முறையில்
கீரையைச் சமைத்தால் உண்ண மிகச் சுவையானதாக இருக்கும். ஏதேனும் தவறு ஏற்படின் கசப்பாகவும், கீரையின் நிறம் மாறியும் விடும். அழகாய்
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 250 கிராம்
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 3
சீரகம் - 1/2 டிஸ்பூன்
கத்தரிக்காய் - 3
முருங்காய்கீரை - 2 கப்
மசாலாதூள் - 1 டிஸ்பூன்
கேரட் - 2
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டிஸ்பூன்
எண்ணெய் - 50
வத்தல் - 2
சோம்பு - 1 டிஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
மஞ்சள்தூள் - 1/2 டிஸ்பூன்
செய்முறை :
முதலில் துவரம் பருப்பை ஊற வைத்து கொள்ளவும். பின் குக்கரில் துவரம் பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள்தூள் என அனைத்தும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும். மேலேசொன்ன காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளவும். வெட்டிய காய்கறிகளை வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் வைக்கவும். 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பின்பு புளி கரைத்து ஊற்றவும். மசாலாதூள் (மிளகாய்தூள்) சேர்த்து கொதிக்க விடவும். முதல் கொதி வந்தடவுடன் வேக வைத்த பருப்பு, காய்கறிகளை சேர்க்கவும். பின் உப்பு, முருங்கை கீரை போட்டு கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயார். குழந்தைகளுக்கு கீரை தனியாக கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இதில் சாம்பாருடன் கலந்து இருப்பதால் சாப்பிடுவார்கள். முருங்கைக் கீரை வாசனையுடன் சாம்பார் மணம் துாக்கலாக காணப்படும்.
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுங்கள்.
சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயார். குழந்தைகளுக்கு கீரை தனியாக கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இதில் சாம்பாருடன் கலந்து இருப்பதால் சாப்பிடுவார்கள். முருங்கைக் கீரை வாசனையுடன் சாம்பார் மணம் துாக்கலாக காணப்படும்.
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுங்கள்.
Image Credit : photographytuts.com |
0 Comments